Followers

Thursday, November 11, 2010

ஒரு பெண்ணின் விழிவழியே வியட்நாம்

வியட்நாமிய பெண் :


நான் இங்கு வந்து 3 வருடங்கள் முடிந்த போதிலும் என்னால் இவர்களின் மொழியை கற்றுணரமுடியவில்லை. நான் பல நாட்களாகவே இங்குள்ள பெண்களுக்கும், நம் நாட்டு பெண்களுக்கும் உள்ள சில மாறுபாடுகளை பதியவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்

வியட்நாம் நாடு பெரும்பாலும் (30 வருடங்களுக்கு மேலாக) தொடர்ந்து போர்க்களத்தை கண்டதால் பல விஷயங்கள் மாறிபோயுள்ளதாக என் வியட்நாமிய நண்பி கூறினாள். அது உண்மைதான் ஏனெனில், பிரஞ்சு காலனியாக இருந்ததாலும், அமெரிக்க போர் காரணமாகவும் பல கலாசார விஷயங்கள் மாறிப்போயுள்ளன 

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்

என்னுடைய அறிவுக்கெட்டியவரையில் நம்மூரில் இன்னும் ஆண்களுக்கு இணையாக சரிபாதியாக பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றே கருதுகிறேன். இங்குள்ள பெண்கள் செய்யும் வேலைகளை கண்டால், நான் உண்மையிலேயே இந்த வேலைகளை நம்மால் செய்ய இயலுமா என்று எண்ணி இருக்கிறேன்.

இங்குள்ள பெண்கள் இரு மற்றும் பல சக்கர வாகனங்களின் பழுது பார்க்கும் வேலை, இரவு 11 மணிவரை தெருவோர மதுக்கடைகளில் வேலை மற்றும் அணைத்து விதமான தொழிட்சாலைகளிலும் பெண்களே அதிகமாக வேலை பார்கின்றனர்.
இங்குள்ள முதியோர் தங்கள் பிள்ளைகளிடம் பணம் வாங்கி அதில் தங்கள் வாழ்கையை நடத்துவதை அவமானமாக கருதுகின்றனர். முடிந்தவரை தனி தொழில் (எதாவது கைத்தொழில்) செய்து பிழைக்கின்றனர்.

இங்கு பெண்கள் இரவு ஒரு மணிக்கு கூட தெருவில் நடமாடுகின்றனர். எந்த வித பயமோ, குற்றம் நடக்குமோ என்ற உணர்ச்சியோ இல்லை. இங்கு குற்றங்களின் எண்ணிக்கை மிக குறைவு எனலாம்
பெண்கள் யாரும் வீட்டில் இருப்பதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்கள் கல்விக்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் ஒன்னரை வயதிலிருந்து காப்பகத்தின் துணை கொண்டே வளர்கின்றன

பெண்ணே குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்கிறாள். நான் பார்த்தவரை பொதுவாக ஆண்கள் யாரும் துணைக்கு வருவதில்லை. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ளது மற்றும்   இரு சாராரும் இணைந்தே எங்கும் படிக்கின்றனர்.  
மத பிரச்சனை இல்லை, அதிகப்படியான மக்களுக்கு கடவுள் என்பது அவர்களின் மூதாதையர் மட்டுமே. இதன் காரணமாக மத பிரச்சனைகள் இல்லை

இந்த பெண்களின் கல்வி அவர்கள் சார்ந்த மொழியினூடே(வியட்நாமி) பயணிக்கிறது. கல்வி கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமில்லை
வளரும் நாடு என்பதால் இன்னும் அடிப்படை வசதிகள் மேருகேரிக்கொண்டு இருக்கின்றன. உணவு பழக்கங்களில் இவர்கள் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்படுகின்றனர்.

காரணம் நாம் அதிகமான மசாலா சேர்த்து உண்மையான சுவையை இழந்துவிடுவோம்.  ஆனால் இவர்கள்  அனைத்தையும் அவித்தோ அல்லது வறுத்தோ உண்கின்றனர். அதிலும் எந்த வித மசாலா விஷயங்களும் சேர்ப்பதில்லை

மாறாக இவர்கள் அதிகப்படியான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்
  
தொடரும் ...........................




Monday, November 8, 2010

தமிழச்சி என்பதால் என்ன?



எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள். பண்டிகைகள் என்பது நாம் கவலைகளை மறந்து சந்தோஷமாக விடுமுறையுடன் கொண்டாடுவதட்க்காக உருவாக்க பட்டவைகளாகவே நான் பார்க்கிறேன்.இதில் எனது கண்ணோட்டதிட்கும் வீட்டவர் கண்ணோட்டதிட்கும் நிறைய வேறுபாடுகள். எனினும்  நல்ல விதமாக பண்டிகை முடிந்தது. பட்டாசு இல்லாமல், வான வேடிக்கைகள் இல்லாமல் எங்களுடைய 3 வது தீபாவளி வியட்நாமில்.

உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

விஷயத்துக்கு வருகிறேன் .......
எனக்கு இந்த செய்தித்தாள் படிக்கும் பழக்கம் என்பது என் திருமணத்திட்கு பிறகே பரிச்சயமானது. அதற்கு முன் தொலைக்காட்சி வழி மட்டுமே என் செய்தி அறிவு.
நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து 3 வருடம் முடிகிறது. இங்கு அதிகப்படியான இந்தியர்கள் கிடையாது மற்றும் தமிழர்கள் குடும்பம் இரண்டு உள்ளது. அவர்களும் பொதுவாக அதிகமாக புழங்குவது இல்லை. ஏன்னெனில் குழந்தைகளே அதிக நேரத்தை எடுத்துகொள்கின்றன. நான் சந்திக்கும் பெரும்பான்மையோர் வடநாட்டவர்களே (வட இந்தியர்கள்).

இவ்வாறு எனது வாழ்க்கை சில நேரங்களில் தனிமையாகவும், சில நேரங்களில் இந்த நண்பிகளுடனும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அவ்வாறு தான் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த ஒரு பஞ்சாபி நண்பி கேட்ட விஷயம் எனக்கு தூக்கி வாரி போட்டது. அது என்ன என்றால் அவளுடைய கணவர் அவளுக்கு வழங்கிய அறிவுரையின் ஒரு பகுதியே. நல்ல வேலை என் வீட்டவர் காதில் கேட்டிருக்க வேண்டுமே, அவ்வளவு தான் பெரிய சண்டையே வந்திருக்கும். அந்த நிகழ்வு பற்றியே இந்த பதிவு.

அவள் கூறியது: என் கணவர் அடிக்கடி என்னிடம் சொல்வது என்ன தெரியுமா ?

நான் : என்ன சொல்லுங்கள்.

அவள் கூறியது: நீங்கள் என்னை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது.

நான் : இல்லை சொல்லுங்கள்.

அவள்: நீங்கள் தமிழ் நாட்டவரா  அல்லது இலங்கையை சேர்ந்தவரா?

நான்தமிழ் நாட்டவள், ஏன் அதில் என்ன பிரச்சினை!

அவள்உங்களிடம் பழகும் போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என்றும். எப்போதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே உங்களின் எண்ணங்கள் இருக்கும் என்றும் என் கணவர் கூறினார்.

நான்ஏன் அப்படி கூறினார்?

அவள்: உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த தமிழர்கள் தான் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்
வேலைக்கு சென்று சேர்ந்து, இன்று அந்த நாட்டிலே பெரிய பிரச்சினையை உருவாக்கி கொண்டு இருக்கிறார்களாம். அதே எண்ணம்தான் உங்களுக்கும் இருக்கும். எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பதே உங்கள் சமூகத்தின் குறிக்கோள். எனவே உங்களிடம் பழக்கம் வைத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

அவள் கூறியதில் இருந்து எனக்கு புலப்பட்டது யாதெனின்: எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் இவர்கள். அதுவும் ஒரே நாட்டில் இருந்து கொண்டு நம்மை ஏன் இவர்கள் சண்டைகாரர்களாக நினைக்கிறார்கள்.

அடப்பாவிகளா எங்கள் சமூகமே அந்நாட்டை உருவாக்கி ஆண்டது. நேற்று வந்த பாதகர்களால் எம் தொப்புள் கொடி சொந்தங்கள் இன்றும் முள்வேலியில் அடைபட்டு கிடக்கின்றன. என்னை போன்ற பல பேர் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். இந்த நிலையில் எங்களுக்கு தோள் கொடுக்கவேண்டியவர்களே எங்களை கேவலமாக பேசும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோமே என்ற உணர்வு எனக்கு மேலோங்கி நிற்கிறது.

எந்த அளவுக்கு வடகத்திய ஊடகங்கள் நம்மை பற்றி தவறான புரிதலை வட நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றன. என்னவோ நாம் தினமும் சண்டைக்கு அலையும் மக்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வைத்திருகின்றன.

ஒரு தவறான புரிதல் கொண்டிருக்கும் ஆண் அதைபற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமல் அதை அப்படியா தனது துணைக்கும் ஏற்றி விடுவது

என்னால் திட்ட முடியவில்லை அவளை!!!!!!!!


அவளிடம் நான் தமிழனின் உண்மையான பாரம்பரியம், இன்றைய பிரச்சனையின் உண்மைகள் பலவற்றையும் எடுத்துக்கூறி புரியவைக்க நெடு நேரமானது. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தெளிவானது. இந்த தவறான புரிதலின் காரணமாக தான் மற்ற வட இந்திய நண்பிகளும் என்னிடம் சற்று விலகி இருக்கிறார்கள் என்பது.

மற்றொரு நாள் அவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து தமிழரை பற்றிய தவறான புரிதலை விளக்கப்படுத்தி, உண்மை நிலையென்ன என்பதை தெளிவு படுத்திய பின்னே தான் எனக்கு தூக்கம் வந்தது.