Followers

Wednesday, December 22, 2010

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்


வலைத்தள நண்பர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள். நான் கிட்டத்தட்ட ஒன்னரை மாதங்களாக பதிவுகள் எதுவும் போடாமல் இருந்துவிட்டேன். மீண்டும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தாயிற்று. இனி தொடர்ந்து பதிவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் வீட்டவர் சற்று உலகப்பார்வையில் தெரிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.

Thursday, November 11, 2010

ஒரு பெண்ணின் விழிவழியே வியட்நாம்

வியட்நாமிய பெண் :


நான் இங்கு வந்து 3 வருடங்கள் முடிந்த போதிலும் என்னால் இவர்களின் மொழியை கற்றுணரமுடியவில்லை. நான் பல நாட்களாகவே இங்குள்ள பெண்களுக்கும், நம் நாட்டு பெண்களுக்கும் உள்ள சில மாறுபாடுகளை பதியவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்

வியட்நாம் நாடு பெரும்பாலும் (30 வருடங்களுக்கு மேலாக) தொடர்ந்து போர்க்களத்தை கண்டதால் பல விஷயங்கள் மாறிபோயுள்ளதாக என் வியட்நாமிய நண்பி கூறினாள். அது உண்மைதான் ஏனெனில், பிரஞ்சு காலனியாக இருந்ததாலும், அமெரிக்க போர் காரணமாகவும் பல கலாசார விஷயங்கள் மாறிப்போயுள்ளன 

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்

என்னுடைய அறிவுக்கெட்டியவரையில் நம்மூரில் இன்னும் ஆண்களுக்கு இணையாக சரிபாதியாக பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றே கருதுகிறேன். இங்குள்ள பெண்கள் செய்யும் வேலைகளை கண்டால், நான் உண்மையிலேயே இந்த வேலைகளை நம்மால் செய்ய இயலுமா என்று எண்ணி இருக்கிறேன்.

இங்குள்ள பெண்கள் இரு மற்றும் பல சக்கர வாகனங்களின் பழுது பார்க்கும் வேலை, இரவு 11 மணிவரை தெருவோர மதுக்கடைகளில் வேலை மற்றும் அணைத்து விதமான தொழிட்சாலைகளிலும் பெண்களே அதிகமாக வேலை பார்கின்றனர்.
இங்குள்ள முதியோர் தங்கள் பிள்ளைகளிடம் பணம் வாங்கி அதில் தங்கள் வாழ்கையை நடத்துவதை அவமானமாக கருதுகின்றனர். முடிந்தவரை தனி தொழில் (எதாவது கைத்தொழில்) செய்து பிழைக்கின்றனர்.

இங்கு பெண்கள் இரவு ஒரு மணிக்கு கூட தெருவில் நடமாடுகின்றனர். எந்த வித பயமோ, குற்றம் நடக்குமோ என்ற உணர்ச்சியோ இல்லை. இங்கு குற்றங்களின் எண்ணிக்கை மிக குறைவு எனலாம்
பெண்கள் யாரும் வீட்டில் இருப்பதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்கள் கல்விக்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் ஒன்னரை வயதிலிருந்து காப்பகத்தின் துணை கொண்டே வளர்கின்றன

பெண்ணே குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்கிறாள். நான் பார்த்தவரை பொதுவாக ஆண்கள் யாரும் துணைக்கு வருவதில்லை. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ளது மற்றும்   இரு சாராரும் இணைந்தே எங்கும் படிக்கின்றனர்.  
மத பிரச்சனை இல்லை, அதிகப்படியான மக்களுக்கு கடவுள் என்பது அவர்களின் மூதாதையர் மட்டுமே. இதன் காரணமாக மத பிரச்சனைகள் இல்லை

இந்த பெண்களின் கல்வி அவர்கள் சார்ந்த மொழியினூடே(வியட்நாமி) பயணிக்கிறது. கல்வி கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமில்லை
வளரும் நாடு என்பதால் இன்னும் அடிப்படை வசதிகள் மேருகேரிக்கொண்டு இருக்கின்றன. உணவு பழக்கங்களில் இவர்கள் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்படுகின்றனர்.

காரணம் நாம் அதிகமான மசாலா சேர்த்து உண்மையான சுவையை இழந்துவிடுவோம்.  ஆனால் இவர்கள்  அனைத்தையும் அவித்தோ அல்லது வறுத்தோ உண்கின்றனர். அதிலும் எந்த வித மசாலா விஷயங்களும் சேர்ப்பதில்லை

மாறாக இவர்கள் அதிகப்படியான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்
  
தொடரும் ...........................




Monday, November 8, 2010

தமிழச்சி என்பதால் என்ன?



எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள். பண்டிகைகள் என்பது நாம் கவலைகளை மறந்து சந்தோஷமாக விடுமுறையுடன் கொண்டாடுவதட்க்காக உருவாக்க பட்டவைகளாகவே நான் பார்க்கிறேன்.இதில் எனது கண்ணோட்டதிட்கும் வீட்டவர் கண்ணோட்டதிட்கும் நிறைய வேறுபாடுகள். எனினும்  நல்ல விதமாக பண்டிகை முடிந்தது. பட்டாசு இல்லாமல், வான வேடிக்கைகள் இல்லாமல் எங்களுடைய 3 வது தீபாவளி வியட்நாமில்.

உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

விஷயத்துக்கு வருகிறேன் .......
எனக்கு இந்த செய்தித்தாள் படிக்கும் பழக்கம் என்பது என் திருமணத்திட்கு பிறகே பரிச்சயமானது. அதற்கு முன் தொலைக்காட்சி வழி மட்டுமே என் செய்தி அறிவு.
நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து 3 வருடம் முடிகிறது. இங்கு அதிகப்படியான இந்தியர்கள் கிடையாது மற்றும் தமிழர்கள் குடும்பம் இரண்டு உள்ளது. அவர்களும் பொதுவாக அதிகமாக புழங்குவது இல்லை. ஏன்னெனில் குழந்தைகளே அதிக நேரத்தை எடுத்துகொள்கின்றன. நான் சந்திக்கும் பெரும்பான்மையோர் வடநாட்டவர்களே (வட இந்தியர்கள்).

இவ்வாறு எனது வாழ்க்கை சில நேரங்களில் தனிமையாகவும், சில நேரங்களில் இந்த நண்பிகளுடனும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அவ்வாறு தான் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த ஒரு பஞ்சாபி நண்பி கேட்ட விஷயம் எனக்கு தூக்கி வாரி போட்டது. அது என்ன என்றால் அவளுடைய கணவர் அவளுக்கு வழங்கிய அறிவுரையின் ஒரு பகுதியே. நல்ல வேலை என் வீட்டவர் காதில் கேட்டிருக்க வேண்டுமே, அவ்வளவு தான் பெரிய சண்டையே வந்திருக்கும். அந்த நிகழ்வு பற்றியே இந்த பதிவு.

அவள் கூறியது: என் கணவர் அடிக்கடி என்னிடம் சொல்வது என்ன தெரியுமா ?

நான் : என்ன சொல்லுங்கள்.

அவள் கூறியது: நீங்கள் என்னை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது.

நான் : இல்லை சொல்லுங்கள்.

அவள்: நீங்கள் தமிழ் நாட்டவரா  அல்லது இலங்கையை சேர்ந்தவரா?

நான்தமிழ் நாட்டவள், ஏன் அதில் என்ன பிரச்சினை!

அவள்உங்களிடம் பழகும் போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என்றும். எப்போதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே உங்களின் எண்ணங்கள் இருக்கும் என்றும் என் கணவர் கூறினார்.

நான்ஏன் அப்படி கூறினார்?

அவள்: உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த தமிழர்கள் தான் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்
வேலைக்கு சென்று சேர்ந்து, இன்று அந்த நாட்டிலே பெரிய பிரச்சினையை உருவாக்கி கொண்டு இருக்கிறார்களாம். அதே எண்ணம்தான் உங்களுக்கும் இருக்கும். எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பதே உங்கள் சமூகத்தின் குறிக்கோள். எனவே உங்களிடம் பழக்கம் வைத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

அவள் கூறியதில் இருந்து எனக்கு புலப்பட்டது யாதெனின்: எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் இவர்கள். அதுவும் ஒரே நாட்டில் இருந்து கொண்டு நம்மை ஏன் இவர்கள் சண்டைகாரர்களாக நினைக்கிறார்கள்.

அடப்பாவிகளா எங்கள் சமூகமே அந்நாட்டை உருவாக்கி ஆண்டது. நேற்று வந்த பாதகர்களால் எம் தொப்புள் கொடி சொந்தங்கள் இன்றும் முள்வேலியில் அடைபட்டு கிடக்கின்றன. என்னை போன்ற பல பேர் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். இந்த நிலையில் எங்களுக்கு தோள் கொடுக்கவேண்டியவர்களே எங்களை கேவலமாக பேசும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோமே என்ற உணர்வு எனக்கு மேலோங்கி நிற்கிறது.

எந்த அளவுக்கு வடகத்திய ஊடகங்கள் நம்மை பற்றி தவறான புரிதலை வட நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றன. என்னவோ நாம் தினமும் சண்டைக்கு அலையும் மக்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வைத்திருகின்றன.

ஒரு தவறான புரிதல் கொண்டிருக்கும் ஆண் அதைபற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமல் அதை அப்படியா தனது துணைக்கும் ஏற்றி விடுவது

என்னால் திட்ட முடியவில்லை அவளை!!!!!!!!


அவளிடம் நான் தமிழனின் உண்மையான பாரம்பரியம், இன்றைய பிரச்சனையின் உண்மைகள் பலவற்றையும் எடுத்துக்கூறி புரியவைக்க நெடு நேரமானது. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தெளிவானது. இந்த தவறான புரிதலின் காரணமாக தான் மற்ற வட இந்திய நண்பிகளும் என்னிடம் சற்று விலகி இருக்கிறார்கள் என்பது.

மற்றொரு நாள் அவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து தமிழரை பற்றிய தவறான புரிதலை விளக்கப்படுத்தி, உண்மை நிலையென்ன என்பதை தெளிவு படுத்திய பின்னே தான் எனக்கு தூக்கம் வந்தது.

Wednesday, November 3, 2010

பெண் – வாழ்க்கையே ஓர் நெடிய பயணம் (கதையல்ல உண்மை)

என்னை போன்ற கதை (கதையல்ல நிஜம்) நடை தெரியாதவரையும் அரவணைத்தும், உற்சாகப்படுத்தி  கொண்டும் இருக்கும் சான்றோருக்கு நன்றி

நான் பொதுவாக கதை எழுத தெரியாதவள். ஆனால் நான் என் வாழ்வில் கண்ட பெண்களின் வாழ்க்கை பாதையை அவர்களின் துணைகொண்டு எழுதி வருகிறேன்(நம்முடன் வாழ்பர்களிடம் நிறைய ஏற்ற இறக்க விஷயங்கள் உள்ளன அவை - உங்கள் பார்வைக்கு - இதுவே இந்த தளத்தின் குறிக்கோள்)

பெண் வெறும் வீட்டு அடிமையல்ல என்று நிரூபித்த ஒரு பெண்ணை பற்றிய பதிவு.

நான் சந்தித்த ஒரு பெண்மணியின் 
நினைவுக்குறிப்பிளிருந்து அப்பெண்மணியின் உண்மை வாழ்க்கை உங்க பார்வைக்கு

ஜோவென மழை பெய்து கொண்டு இருந்தது.

ஏம்மா எங்க போய்ட்டா இந்த சரோ - குரல் கணீர் என்று வந்தது.
என்னங்க மறந்துட்டீங்களா  இன்னிக்கு அவங்க பள்ளியில விளையாட்டு தினம். அது தான் நேரம் கழிச்சிதான் வருவேன்னு காலையிலேயே சொல்லிட்டு போய்ட்டா

ம்ம்……………7 பெத்து என்ன பிரோஜனம் ஒன்னு மட்டும் தான் படிக்குது. மத்தது எல்லாம்  வேலைக்கு போயிடுச்சிக.

இவளாவது நல்ல நிலமைக்கு வரணும். ஒரு சாதாரண இசைகலைஞரின் அவா அது

சரோஜா படிப்பில் நல்ல சுட்டி மற்றும் விளையாட்டிலும் நல்ல ஆர்வமுடையவள். அவள் குடும்பத்தில் அவளோடு கூட பிறந்தவர்கள் மொத்தம் 7  பேர். பெரிய குடும்பம் ஆனால் நடுத்தர வர்கத்திட்கும் கீழாக இருந்தது அவர்களின் நிதி நிலைமை

1960 களில் அவள் தன்னுடைய பள்ளிபடிப்பிட்காக போராடி வந்தாள். அக்காலத்தில் பெண் கல்வி ஒன்றும் எளிதாக அமைந்து விடவில்லை அவளுக்கு. ஆனாலும் அவளுடைய விடா முயற்சியின் பலனாக அவளால் 12 ஆம் வகுப்பு வரை செல்ல முடிந்தது. குடும்பத்தில் மற்ற அங்கத்தினர்கள் 8 வது தாண்டவில்லை. அப்போது அவளுக்கு ஆசிரியை பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கான செலவுகளை சரோஜாவின் அப்பாவால் கொடுக்க இயலாது போனது. அவள் அப்பா ஒரு இசைக்கலைஞர் (ormonist) அக்காலகட்டத்தில் அவருக்கு கிடைத்த சொற்ப காசைகொண்டு அவர்கள் குடும்பம் சென்னையில் வசித்து வந்தது

என்னதான் அவள் ஆசிரியை வாய்ப்பை இழந்தாலும் அவளுடைய நம்பிக்கையை யாராலும் உடைக்க இயலவில்லை. அவள் மற்றவர்களிடம் இருந்து வித்யாசப்பட்டவளாக தெரிந்தாள். அவளுடைய குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு செல்லவேண்டி ஆனது. வீட்டில் 2 ஆண் மற்றும் 5 பெண் எல்லோரும் வேலைக்கு செல்லலாயினர். அப்போதே ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் மேற்பார்வையளராக சரோஜாக்கு வேலை கிடைத்தது. தன்னை யார் மதித்து பேசுகிறார்களோ அவர்களுக்கு அவளுடைய மரியாதையை என்றும் உண்டு. பெண்தானே என்று பேசுபவர்களுக்கு நிச்சயம் எதிர்பதம் உண்டு. அக்காலத்தில் அவளை பார்த்தாலே பயம் கலந்த மரியாதையை அவளுடன் பணியாற்றியவர்களுக்கு இருந்தது. அவளுடைய தைரியமான பேச்சு, நடை, உடை , பார்வை பார்த்தே ஆண்கள் ஒதுங்கலாயினர். அது அவளுக்கு தன் மேல் அசைக்க முடியாத மனோ பலத்தை கொடுத்தது


என்னம்மா சரோ எப்படி இருக்கே - மேலாளரின் குரல் வழிந்து கேட்டது.   நல்லா இருக்கேன் சார் ஏன் உங்களுக்கு எதாவது உதவி தேவைபடுதா?

அய்யயோ இல்லம்மா சும்மா தான் கேட்டேன்.  

அந்த மேலாளர் அவளுடைய வறுமையை பயன்படுத்தி விளையாட நினைத்து அடிவாங்கியவர்


அவருக்கு வாங்கிய அடியைவிட அவள் சொன்ன வார்த்தை சுட்டெரித்தது (ஏன்டா உன் மனைவிய வேலைக்கு தானே அனுப்புற இல்ல வேற எங்காவதா).

சென்னையில் ஒரு மழைகாலம்:

இளமைக்கால நினைவுகள் அவள் கண்ணில் வந்து சென்றன. என்ன பாட்டி இப்போ எப்படி இருக்கு - கேட்டாள் அந்த வேலைக்கார பெண். நேத்து தான் முடியாம போச்சி திடிர்னு நெஞ்சு வலி என் நேரம் நான் பிழச்சுகிட்டேன். ஏன் அப்படி சொல்றீங்க ………….

இல்லம்மா என்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது.

ஆனா நான் இப்போ இங்க உங்களுக்கு எவ்ளோ கஷ்டம் குடுக்குறேன் பாரு

என்ன பாட்டி அப்படி சொல்லிட்டீங்க

உங்கள போல வயதானவங்களுக்கு சேவை செய்யறது பெரிய புண்ணியம் என்றாள் அந்த பெண்

இப்போது பாட்டிக்கு கிட்டத்தட்ட 65 வயது.

தன் சொந்தங்களை கூட தப்பாக நினைத்து பார்க்காத அவளுடைய பெருந்தன்மையை நினைத்தே அந்த பணிப்பெண் அவ்வாறு கூறினாள்

தொடரும் ...................