Followers

Wednesday, October 6, 2010

அரசியல் ஆரம்பித்த இடம்

என்னை போன்ற சாதாரண பதிவரையும் வரவேற்க்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

மேலும் அனுபவம் மிகுந்த பதிவர்கள் என்னை மன்னிப்பாராக

எல்லோரையும் போலவே சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். என்னுடைய இந்த பதிவு சற்று வித்தியாசப்பட்டது என்பேன்

நாம் இப்போது பார்க்கும் அரசியல் மனிதன் போலல்லாமல் தன் அத்துணை வுடமையையும் நாட்டுகாக விட்டு சென்ற மனிதர். நினைத்திருந்தால் வெள்ளையனிடம் பெரிய பதவி மற்றும் பல சுக போகங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால் வாழ்ந்தாலும், இறந்தாலும் வீரனாகவே இன்னும் நம்முடன்  வாழும் கதாநாயகன் போஸ் என்கிற சுபாஷ் சந்திர போஸ்.

எல்லாரும் இன்றைய அரசியல் பற்றியே பேசுகிறார்கள்.
வுண்மையில்  அன்றே நமது மகாத்மா விதைத்தார் இன்றும் அதையே நாம் அறுவடை செய்கிறோம். அன்று சுபாஷ் மற்றும் நேரு ஒரே மார்கத்தில் இருந்தனர்
அப்படி இருந்தால் காந்தியார் நிலை பாதிக்கப்படும் என்று நேருவின் தந்தை நேஹ்ருவை ஒரே நாளில் போசை விட்டு விலகசெய்தார். அன்று தனி மரமானாலும் தனியே போராடி மறைந்தார் போஸ்
அப்படி ஆரம்பித்த அரசியலே இன்றும் நிலவுகிறது. இந்த இடத்தில எல்லோரும் மோதிலால் மட்டுமே இதை செய்ததாக கொள்ளவேண்டாம். காந்தி சொற்படி மோதிலால் செய்தார்

போஸ் வழியே நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால் ஒருவேளை நம்முடைய இன்றைய அரசியல் நம் நாட்டின் முன்னேற்றதிட்காக மட்டுமே இருந்திருக்குமோ !!!!!!!!!!!!!!!!!!!!!!

இது ஒரு ஆவண படத்தின் மூலமாக  நான் தெரிந்து கொண்டது. தவிர இது பொது கருத்தாக கொள்ளவேண்டாம் மற்றும் ஒரு பார்வையாக நான் பார்க்கிறேன்.

பொதுவாக பெரிய பதிவு போடும் அளவக்கு இன்னும் தயாராகவில்லை என்றே நினைகிறேன்.

தங்கள் கருத்துகளை பகிரவும்

0 comments: